Monday, March 03, 2008

சிதம்பரம் கோயில் விவகாரம்: உண்மை என்ன?

பூலோக கைலாசம் என்றும் பெரிய கோவில் என்றும் ஆகாச ஸ்தலம் என்றும் அழைக்கப் படும் பெருமை வாய்ந்த சிதம்பரம் திருக்கோயிலில் நேற்று நடந்த அமளி, ரகளைகள் மிகவும் வருத்தம் தருகின்றன.

நேற்றும் இன்று காலையும் ஜெயா டிவியில் வந்த செய்திகளில் போலீசாருக்கும் ஆறுமுகச்சாமி ஆதரவாளர்களுக்கும் இடையில் தான் தகராறு என்றூ சொன்னார்கள். இப்போது தான் இந்தச் செய்திகளை விவரமாகப் படித்தேன் -

தினமலர்:
http://dinamalar.com/2008MAR03/frontpage-news.asp?newsid=3

தட்ஸ் தமிழ்:
http://thatstamil.oneindia.in/news/2008/03/03/tn-chidambaram-temple-issue-12-dheeksidars-arrest.html

முதலில் "தமிழுக்கு அவமரியாதை" போன்ற சொல்லாடல்கள் நகைப்பை வரவழைக்கின்றன.. .. கனகசபை மேல் நின்றுகொண்டிருக்கும் தீட்சிதர்கள் எல்லாருமே அவர்களுக்கிடையிலும், அங்கு வரும் சட்டை கழற்றிய பக்தர்களிடமும் தமிழில் தானே பேசுகிறார்கள்? தமிழில் வாங்க போங்க என்ற சாதாரணப் பேச்சே அங்கே சகஜமாக இருக்கும் போது தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள் பாடத் தடை இருக்கிறது என்பது பிதற்றலாக இல்லையா?

போன ஆகஸ்டு மாதம் ஆனித் திருநாளின் போது சிதம்பரத்தில் இருந்தேன்.
"சிதம்பர ரகசியம்" திரை விலக்கிக் காண்பித்த தீட்சிதர் "இதோ பாருங்கள் தங்க வில்வமாலை.. மாணிக்கவாசகர், நந்தனார் இந்த மகான்கள் எல்லாம் முக்தி பெற்ற இடம் இது தான்.. தரிசனம் செய்து கொள்ளுங்கள்" என்று அழகான தமிழில் தான் விளக்கினார்.. புனிதமான கனகசபை மீது 10 நிமிடம் நின்று சில சுலோகங்களையும் தேவாரப் பாடல்களையும் வாய்விட்டுப் பாடிக் கொண்டிருந்தேன்.. எந்த தீட்சிதரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

பிறகு இந்த ஆறுமுகச்சாமியை மட்டும் ஏன் தடுக்க வேண்டும்? இதில் ஏதோ சூது இருக்கிறது.. இந்த ஆ.மு.சாமி உண்மையான பக்தராக இருந்தால் பக்தர்களை அல்லவா துணைக்கழைத்துக் கொண்டு போக வேண்டும்? இந்து விரோத, நாத்திக, மனித உரிமை ஆசாமிகளுக்கு தில்லைச் சிற்றம்பலத்தில் என்ன வேலை?




மேலும், இந்த கனகசபை என்பது ஒரு மண்டப மேடை போன்று இருக்கும். இதன் மேற்கூரையில் பொன் ஓடுகள் வேயப் பட்டு, சிற்றம்பலம் (சிறிய கோவில்) என்றும் அழைக்கப் படுகிறது. இங்கு 10-12 பேருக்கு மேல் நிற்கமுடியாது.. கனகசபையின் கீழிருந்து பார்த்தாலும் நடராஜரை தரிசனம் செய்யலாம். இங்கு அதிக நேரம் ஒரு குழுவினரே நின்று பாடல்கள் பாடுவது மற்ற பக்தர்கள் சபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு இடைஞ்சல் என்பதாலும் ஆ.மு.சாமி குழுவினர் அங்கு பாட அனுமதி மறுக்கப் பட்டது என்றும் கூறப்படுகிறது.

நேற்றைய சம்பவங்கள் பற்றி தீட்சிதர் ஒருவரிடம் கேட்ட போது, "ஆறு கால பூஜையின் போது நாங்களே தவறாமல் தேவாரம் பாடுகிறோம்.. தமிழ்நாட்டுல பல ஜாதிக்காரா வேற பாஷையெல்லாம் பேசறா... ஆனா வேதமந்திரம், அதன் பிறகு மற்ற எல்லாத்துக்கும் எங்களுக்குத் தாய்மொழி தமிழ் தான். எங்கள் சமூகத்திலேயே தமிழ்ப் புலவர் பட்டம் வாங்கினவா 6 பேர் இருக்கா. ஆனால் செய்திகளில் எல்லாம் இப்படி சித்தரிக்கிறாளே" என்று மனம் குமுறி ஆற்றாமையுடன் குறிப்பிட்டார்.

நேற்று ஆ.மு.சாமி தலைமையில் கனகசபைக்குள் நுழைந்த ஐந்தாறு பேர் "சாமி வாழ்க! தீட்சிதர்கள் ஒழிக!" என்று கோஷம் போட்டு அந்த தெய்வ சன்னிதியில் சில கெட்ட வார்த்தைகளையும் பேசி ஏசினர் என்றும் துக்கம் தொண்டை அடைக்கக் குறிப்பிட்டார் அவர். அரசு வக்கீல்கள் நீதிமன்ற ஆணையைக் காண்பித்ததும், அதனை ஏற்று "ஆ.மு. சாமி மற்றும் அவருடன் சிலர் வந்து பாடிக் கொள்ளட்டும், பெருங்கூட்டம் வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம்" என்று அரசு ஆணையை மதித்து தீட்சிதர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஏளனச் சிரிப்புடன் இந்தக் கும்பல் நுழைவது கண்டு பொறுக்காத முதிய தீட்சிதர் ஒருவர் அவரைத் தடுக்கப் போகத் தான், காவலர்கள் குண்டுக் கட்டாக தீட்சிதர்களைத் தூக்கி வெளியேற்றப் போய் அமளியாயிற்று.

ஆனால் காவல்துறை அடாவடி செய்த ஆ.மு.சாமி ஆதரவாளர்களோடு 10 தீட்சிதர்களையும் கைது செய்து கடலூர் சிறையில் வைத்துள்ளது. இது அராஜகத்தின் உச்சகட்டம். பழந்தமிழ் மன்னர்கள் அனைவரும் மதித்துப் போற்றிய சமயப் பெருந்தகைகளின் சந்ததியினரை மக்கள் விரோத, பாசிக கருநாநிதி அரசின் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.




"தில்லை வாழ் அந்தணர்கள் அடியார்க்கும் அடியேன்" என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய காலத்திற்கும் முன்பிருந்தே, 1500 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லை நடராஜப் பெருமானுக்கு அடிமை செய்து வருபவை தீட்சிதர் குடும்பங்கள்.

தனது நூலின் முதல் புராணத்திலேயே சேக்கிழார் பெருமான் தில்லை வாழ் அந்தணர்களின் பெருமையைப் பலவாறு எடுத்துக் கூறுகின்றார் -

போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்

வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க
தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார்

செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்

(பெரிய புராணம், தில்லை வாழ் அந்தணர் புராணம், 2.1.3, 2.1.5, 2.1.8)

செங்கோல் மன்னனான ராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பிகளின் துணையோடு சென்று தில்லையில் ஓர் அறையில் வைத்துப் பூட்டப் பட்டிருந்த தேவார ஏடுகளை வேண்ட, தில்லைவாழ் அந்தணர்கள் அதனை இயற்றிய மூவர் வந்தாலன்றி அவற்றைத் தரமாட்டோம் என்று இயம்பினர். மாமன்னனான ராஜராஜன் உடனடியாக அரசாணை பிறப்பித்தானா? இல்லை, அவர்கள் சொல்லை ஏற்று அப்பர்,சுந்தரர், சம்பந்தர் திருமேனிகளை உருவாக்கி எடுத்துவந்து அவர்கள் முன் எழுந்தருளிச் செய்ய, அதனை ஏற்ற தில்லை வாழ் அந்தணர்கள் மனமுவந்து திருமுறைச் சுவடிகளை மன்னனுக்கு அளித்தனர்.

சேக்கிழார் காலத்தில் மூவாயிரராக இருந்த இந்த சமூகம் காலவசத்தால் குறுகித் தேய்ந்து இப்போது 100 குடும்பங்களே இருக்கின்றன. சிதம்பரம் திருக்கோயிலின் ஆகம விதிகளின் படி பூஜைகள், மற்ற மரபுகளை நாள்தவறாமல் நடத்தி வைத்து வருவது மட்டுமே இவர்களது முழு நேர வாழ்க்கைப் பணி.

தில்லைத் திருக்கோயில் தீட்சிதர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பது இந்து விரோதிகள், கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதை தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் வெற்றிகரமாக நடத்திய திமுக கட்சி ரவுடிகள், திராவிட இயக்க பாசிஸ்டுகள் இப்படிப் பலரது கண்களையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் மூலம் தீட்சிதர்கள் பற்றிய ஒரு வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்புணர்வையும் உருவாக்கி பின்னர் இதைக் காரணம் காட்டி சிதம்பரம் கோயிலை அரசு கையகப் படுத்தும் சூழலை உருவாக்குவதற்கான சதித்திட்டத்தின் ஒரு அங்கம் தான் இது. இப்படி அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்து சீரழிந்த கோவில்கள் பற்றிய பல உதாரணங்கள் நம்மிடையே உள்ளன.

எனவே, உலகெங்கும் வாழும் தில்லைக் கூத்தனின் பக்தர்களும், சைவ அன்பர்களும், இந்துமத அபிமானிகளும், இந்து இயக்கங்களும், சிதம்பரம் நகர மக்களும் இந்த சதித் திட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

மேலும், ஒரு சில தீட்சிதர்களின் ஒரு சில நடவடிக்கைகள் (பான் பராக் போடுவது, பணக்காரர்களிடம் ஓவராகக் குழைவது இப்படி) கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனதில் அவர்கள் மேல் உள்ள மரியாதையைக் குறைக்கும் விதமாக உள்ளன. இதனைக் கண்ணுறும் உள்ளூர் மக்களுக்கும் அவர்கள் மேல் மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அந்த சமூகத்தின் பெரியவர்கள் தங்கள் பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு இது போன்ற அதிருப்தி அலைகள் உருவாகாத வண்ணம், கோயிலுக்கு வரும் எல்லா பக்தர்களின் நன்மதிப்பையும் பெறும் முறையில் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களும் அப்போது தான் அவர்கள் சம்பந்தப் பட்ட பிரசினைகளில் தீட்சிதர்களுக்குத் துணை நிற்பார்கள்.

கோவில், பூஜை, சம்பிரதாயம் என்பதிலேயே மூழ்கி, தங்கள் வாழ்வுரிமையும், கலாசார உரிமைகளும் பறிக்கப் படுவதைக் கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறது தீட்சிதர்கள் சமூகம். இந்நிலையில் இந்த இந்த விவகாரத்தில் அவர்கள் தரப்பு நியாயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமை ஊடகங்களுக்கு உள்ளது. அவை தங்கள் கடமையை நிறைவேற்றுமா?

பிற்சேர்க்கை:

சிதம்பரம் விவகாரத்தில் தீட்சிதர்கள், கோயில்களில் பக்தியுடன் வழிபடும் இந்துக்கள் இவர்கள் தரப்பில் சரிவர நீது வழங்கப் படவேண்டும் என்று கோரி உயர்நீதி மன்றத்திற்கு ஒரு மனு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பதிவைப் படிப்பவர்கள் தயவு செய்து இணையம் மூலம் இந்த மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் - http://www.petitiononline.com/Rudhram/petition.html.

26 comments:

ஜயராமன் said...

ஜடாயு ஐயா,

சிறந்த பதிவு.

நீங்கள் குறிப்பிட்டது போல, பல தரப்பு நியாயங்கள் இதில் சரிவர வெளிவரவில்லை என்றே தோன்றுகிறது.

இதில் அரசாங்கம் இப்படி தான்தோன்றித்தனமாக ஒரு அரசாணையைப்பிறப்பித்து இந்த விவகாரத்தில் ஆகம விதியை மதிக்கும் மனிதர்களின் மனதை புண்படுத்தியிருக்கிறது.

இந்த அரசாணைக்கு முன்பு, இது குறித்து தில்லை அந்தணர்களுடன் ஏதேனும் கருத்து கோரப்பட்டதா என்பது தெரியவில்லை.
அப்படி கோரப்படாமல் இந்த அரசாணை வெளியிட்ப்பட்டிருந்தால் இது சரியில்லை என்றும் இதை சட்ட ரீதியாக தடுப்பது சரியே என்றும் தோன்றுகிறது.

ஆனால், இன்றைய சூழலில் இதில் மேலும் தீவிரம் காட்டுவதில் பொதுமக்களின் தவறான கருத்துக்கு இறையாகும் ஒரு அபாயம் இருக்கிறது.

உண்மையில் இங்கே விவாதிக்கப்படும் ஒரு சலுகை ஒரு சிறிய சலுகை. இதனால் பெரிய மரபு மீறல் ஆகுமா என்று தெரியவில்லை. இருந்த போதிலும், இந்த சிறு விஷயத்தில் சில நாத்தீக இந்து விரோத சக்திகளின் சதிக்கு இவர்கள் அறியாமல் ஆளாகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.


இந்த விவகாரத்தில் தில்லை அந்தணர்கள் கொஞ்சம் சாதுர்யப்போக்கை கடைபிடித்தால் தானேகவே இந்த பரபரப்பு விரும்பிகள் தங்கள் ஈடுபாட்டை இதில் இழப்பார்கள் என்று தோன்றுகிறது. இந்த தீயசக்திகளுக்கு இடம் கொடுக்ககூடாது.

அதே சமயம், மேடையில் எல்லோரும் பாடினால் இடம் இருக்காது என்பதெல்லாம் சரியான காரணங்களாகத்தோன்றவில்லை.

தில்லை அந்தணர்கள் தங்கள் பொதுமுகத்தை இன்னும் பலப்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த பலவீனம், காஞ்சி மடத்திலும் சட்டப்பிரச்சனைகளை எதிர்கொள்வதில் தென்பட்டது. இதில் இந்து இயக்கங்கள் நேரிடையாக ஈடுபட தயங்குகின்றன என்று நினைக்கிறேன். அது உண்மையானால், இது மிகவும் வருந்தத் தக்கது.

தங்கள் பதிவுக்கு மீண்டும் என் மனமாரந்த நன்றி

ஜயராமன்

Anonymous said...

ஏன் தீட்சிதர்கள் ஆறுமுகசாமியை தேவாரம் பாட அனுமதிக்கவில்லை?

உண்மையான காரணங்களை எல்லாரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

இவர்களுக்கு சபாநாயகர் எழுந்தருளியிருக்கும் உள் மண்டபத்தில் சென்று பாடத் தான் அனுமதியில்லை. இதில் சாதீயக் காரணம் எதுவும் இல்லை. ஏனெனில் எல்லா சாதிக்காரர்களும் மண்டபத்தின் உள் சென்று தர்சிக்க அனுமதிக்கப்படுகின்றனர். வேறு சில காரணங்கள் உள்ளன. அவை..

1) வழி வழியாக வந்த மரபை மாற்றக் கூடாது. எல்லாமே அக்காலத்தில் விதிக்கப்பட்ட ஐதீகப்படியே தான் நடக்க வேண்டும் என்பது.

2) அதனால் தான் காலம் மாறினாலும் தங்களுக்குள் இன்னமும் பழைய சம்பிரதாயங்களை விட்டுக் கொடுக்காமல் பின்பற்றி வருகின்றனர்.

3) 5,7 வயதுக்குள் சிறுவர்களுக்கு உபநயனம் செய்து விடுதல், சொந்தத்துக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்ளுதல், திருமணம் ஆன பெண்கள் அனைவரும் கண்டிப்பாக மடிசார் அணிந்து கொள்ளுதல் உட்பட பலவற்றை இன்னமும் ஐதீகம் மாறாமல் பின்பற்றி வருகின்றனர்.

4) இது போன்ற பல காரணங்கள், ஐதீகம் இருக்கலாம். அவற்றைப் பற்றி முழுமையாக, ஆராயாமல், தெரிந்து கொள்ளாமல் 'தமிழுக்கு இடமில்லை' என்பது ஏற்க முடியாதது.

சமீபத்தில் சிதம்பரம் ஆலயம் சென்றிருந்தேன். உலகெங்கும் இல்லாத ஒரு பெருமை சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு உண்டு. அது தான் அங்கு நடக்கும் அர்த்த ஜாம பூஜை. பொதுவாக அனைத்து சிவாலாயங்களிலும் அர்த்த ஜாம பூஜை இரவு 8, 8.30க்குள் முடிந்து விடும். ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரவு 9.30க்கு மேல் தான் அர்த்த ஜாம பூஜையே ஆரம்பிக்கும். கிட்டத்தட்ட 1 மணி நேரம் நடக்கும் இந்த பூஜை. 10.30-11.00 மணி ஆகும் இந்த பூஜை முடிந்து, எம்பெருமானை பள்ளியறையில் சேர்க்க.

தன்னில் இருந்து விடுவித்த உலக சக்திகள் அனைத்தையும் ஆடல் நாயகன் தன்னுள் ஒடுக்கிக் கொள்ளவே, எல்லாக் கோயில்களின் அர்த்த ஜாம பூஜைகள் அனைத்தும் முடிந்த பின்னர், இரவு மிகவும் தாமதமாக இந்தப் பூஜை நடத்தப்படுகிறது. கொடுப்பினை இருந்தால் தான் இந்தப் பூஜையைப் பார்க்க முடியும், கலந்து கொள்ள முடியும் என்றும் சொல்கிறார்கள்.
இந்தப் பூஜையில் சமஸ்கிருந்த மந்திரங்கள் மட்டுமல்ல; தேவாரம், திருவாசகமும் பாடப்படுகிறது. அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டு அவை பாடப்படுகின்றன. ஆனால் அவை சபாநாயகர் எழுந்தருளியிருக்கும் மண்டபத்திற்குள் பாடப்படுவதில்லை. வெளியே தான் பாடப்படுகின்றன. இது தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் வழக்கமாம்.

ஆனால் பக்தர்கள், அவர்கள் யாராக, எந்தச் சாதியினராக இருந்தாலும் சபாநாயகர் மண்டபத்திற்கு உள்ளே சென்று இறைவனை வணங்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. பெண்கள் உடல், உள்ள சுத்தமாகவும், ஆண்கள் வேஷ்டி/பேண்ட் மட்டும் அணிந்து சட்டை, பனியன் எதுவுமின்றி (குருவாயூரப்பன், ஸ்ரீ ராகவேந்திரர், மூகாம்பிகா கோயில் போல) உள்ளே சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். (வழக்கம் போல் தீட்சிதர் குடும்பத்தினர், வி.ஐ.பிகளுக்குக் கட்டணம் கிடையாது. மற்றவர்கள், யாராக, எந்தச் சாதியினராக இருந்தாலும் ரூ. 50/- செலுத்த வேண்டும். இது தமிழகத்தின் எல்லா ஆலயங்களில் வழக்கத்தில் உள்ளது தான்.)

நண்பர் (அவர் பெயர் : செங்குட்டுவன் ஞானசம்பந்தன்) ஒருவரிடம் நடப்பு விபரங்கள் குறித்துக் கேட்டேன். இது சிலர் செய்யும் சதி என்றும், எப்படியாவது சிதம்பரம் கோயிலின் நிர்வாகத்தைத் தாங்கள் கையகப்படுத்திக் கொண்டு, தீட்சிதர்களை தங்கள் கைப்பாவை போல் ஆட்டி வைக்க நினைக்கும் சதியின் உச்சம் என்றும் கூறினார். இவ்வளவு வருடங்களாக இல்லாத, ஏற்படாத இந்தப் பிரச்னை இப்பொழுது மட்டும் ஏற்படக் காரணம் என்ன, எல்லாம் அரசியல் தான் என்றார்.

தீட்சிதர்களால் மற்றவர்களுக்கு எந்தத் தொல்லையும் இல்லை என்றும், அவர்கள் வேலையை அவர்கள் நேர்மையாக, உண்மையாகச் செய்து வருவது பொறுக்காமல் தான் சிலர் இது மாதிரியான பிரச்னைகளைத் தூண்டி விடுகின்றனர் என்றும் சொன்னார்.

தான் சபாநாயகர் மண்டபத்திற்குள் உள்ளேயே சென்று பல முறை தேவாரப் பாடல்கள் பாடியிருப்பதாகவும், தீட்சிதர்கள் செய்யும் பூஜை முறைக்கு, ஆகம விதிகளுக்குத் தொந்தரவு செய்யாமல் பாடினால் அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை என்றும், அவர்கள் ஒன்றும் மொழி வெறியர்கள் இல்லை என்றும் கூறினார்.

முக்கியமாக ஓதுவார்கள் மீது சிதம்பரம் தீட்சிதர்கள் மிகவும் அன்பு கொண்டவர்கள் என்றும், ஓதுவார் தருமபுரம் சாமிநாதனை தினம்தோறும் தேவாரம் பாடச் செய்து, அவருக்கு 'திருமுறைத் திருமாமணி' என்ற பட்டத்தைத் தந்தவர்களும் சிதம்பரம் தீட்சிதர்கள் தான் என்றும் கூறினார்.

மேலும் இது, 'தமிழ்', 'தமிழ்' என்ற போர்வையில் சில 'விஷக்கிருமிகள்' செய்யும் சூழ்ச்சி என்றும் எல்லாவற்றையும் 'அந்த ஆடல் வல்லான்' பார்த்துக் கொள்வான் என்றும் கூறினார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் தற்போது தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாகவும், தங்களை அரவணைக்க யாரும் இல்லை என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் கூறினார்.

தில்லை ஆலயத்தை 'தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியான் ஆன' அந்த இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.

நன்றி.

- சுவாமிநாதன், சென்னை

ஜடாயு said...

// அவர்கள் தரப்பு நியாயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமை ஊடகங்களுக்கு உள்ளது. அவை தங்கள் கடமையை நிறைவேற்றுமா? //

இன்றைய தினமணியில் இந்த செய்தி வந்துள்ளது. தீட்சிதர்கள் தரப்பு நியாயத்தை வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு மிக்க நன்றி.

------------

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080303105812&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=0

தீட்சிதர்களின் செயலர் விளக்கம்

சிதம்பரம், மார்ச் 3: நடராஜர் ஆலயத்தில் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் மரபுகளுக்கு எதிராக, கடவுள் வழிபாட்டிலும் மத நம்பிக்கைகளிலும் நம்பிக்கை இல்லாத ஒரு பிரிவினர், அப்பாவி மனிதர் ஒருவரை பயன்படுத்தி ஆலய புனித அலுவல்களுக்கு குந்தகம் விளைவித்து வருகின்றனர் என, ஆலய பொதுதீட்சிதர்களின் செயலர் எஸ்.எஸ்.தன்வந்திரி தீட்சிதர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வேதத்திற்கும், தமிழ் வேதம் என்று சொல்லக்கூடிய திரு அடியார்களால் பாடப்பெற்ற தேவார, திருவாகசங்களுக்கும் மூல ஆதாரமாக விளங்குவது இந்த தில்லை ஸ்தலமாகும்.

இக் கோயிலில் தினமும் 6 கால பூஜை வழுவாது நடைபெற்று வருகிறது. இந்த 6 கால பூஜையிலும் தமிழ் வேதம் என்று சொல்லக்கூடிய தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்கிற பஞ்சபுராணம் ஓதி முடித்தவுடன் ஒவ்வொரு காலபூஜையும் நிறைவு பெறுகிறது. மார்கழி மாத மகோற்சவத்தில் மாணிக்கவாசகர் திருவெம்பாவை பதிகங்கள் பாடி சாயரட்சையில் ஆராதனை செய்து சிறப்பு வழிபாடாக சைவ அன்பர்களால் போற்றி வரப்படுகிறது.

உண்மை இவ்வாறு இருக்க, ஸ்ரீநடராஜருக்கு வருடத்தில் 4 மஹாபிஷேகமும், தினமும் ஸ்படிக லிங்கம், ரத்தினசபாபதிக்கு பூஜை அபிஷேக ஆராதனைகள் நடக்கின்ற இடத்தில் (கனகசபை) 6 கால பூஜைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசிக்கின்ற இடத்தில், சம்பிரதாய மரபுகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் ஒரு பிரிவினர் குந்தகம் விளைவித்து வருகின்றனர்.

மார்ச் 2-ம் தேதி போலீஸôர் அறிவுறுத்தலின் பேரில் அரசு ஆணையை அமல்படுத்த மேலே பாட அனுமதிக்கப்பட்டனர். கனகசபை மேலே செல்லும் போது சட்டையை கழற்றிவிட்டுச் செல்லும் கோயிலின் மரபு அடிப்படையில் அனைவருக்கும் அறிவுறுத்தினோம். இதில் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு நடைபெற்றது. அதுவும் வருந்தத்தக்க ஒன்று. அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

இந்த விஷயத்தை சில அமைப்புகள், நாங்கள் மைனாரிட்டி என்கிற அலட்சியத்தால் மொழி, மதம், ஜாதி என்கிற வர்ணம் பூசி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தையும், வன்முறையையும் தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலுகிறார்கள்.

தில்லைவாழ் அந்தணர்கள் என்கிற தீட்சிதர்கள் தமிழை நேசிப்பவர்கள், இவர்களுடைய ஆதியும், அந்தமும் தமிழகத்திலுள்ள சிதம்பரம் தான். தாய் மொழி தமிழ்தான். தமிழ் மட்டுமே. இவர்கள் சிதம்பரத்தில் ஆதிமண்ணின் மைந்தர்கள்.

Anonymous said...

http://www.hindu.com/thehindu/holnus/002200803021550.htm
Unruly scenes were witnessed by the devotees after Arumuga Swamy, who had been trying to sing dhevaram inside the sanctum sanctorum for the past several years
எனவே காவல்துறை ஏன் சென்றனர் என்பது பிதற்றல். அவரை அனுமதித்திருந்தால் ஏன் அவர் காவல்துறையிடமோ அல்லது நீதிமன்றத்திடமோ முறையிடப் போகிறார்? இதில் (தி)முக எங்கு நுழைகிறார் என்பது விளங்கவில்லை. அவர் ஒருவரை சிதம்பரத்திலுள்ள தீக்ஷிதர்கள் எதிராக காவல்துறையில் முறையீடு செய்யுங்கள் என்று கூறுவாரா? சும்மா இருக்கிற சங்கை ஊதுவதற்கு எந்த அரசும் (அது திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி) முயலாது. ஆனால் இந்நிகழ்ச்சியை (தி)முக பயன்படுத்திக் கொள்ளலாம்/கொள்வார்கள் எனபதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஆனால் இப்பிரச்சனையை அவர்கள் தூண்டிவிடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

Jadayu, Good post.

BJP leader Ila. Ganesan has issued a statement regarding this. From the same Dinamani -

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080303105849&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=0

சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. தனியார் வசமிருக்கும் அக்கோயிலில் ஏற்கெனவே 6 கால பூஜையையொட்டி தேவாரம் பாடப்படுகிறது.

ஆனால் தற்போது முதன் முதலாக தேவாரம் பாட முயற்சிப்பது போன்ற பொய்யான காட்சி உருவாக்கப்படுகிறது. அறநிலையத் துறைக்கு உரிமையில்லாத அக்கோயிலில் எவ்வித உத்தரவையும் அத்துறை பிறப்பிக்க முடியாது. தீட்சிதர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இப்பிரச்னையைத் தூண்டியுள்ளனர்.

இதற்குப் பின்னணியில் கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், பாமகவினர் உள்ளனர். எனவே இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.

நிர்வாக வேலையைத் தவிர, கடவுளுக்கு என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் என்பதில் எல்லாம் அரசு தலையிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.

ஜடாயு said...

// நன்றி.

- சுவாமிநாதன், சென்னை //

சுவாமிநாதன் ஐயா, விரிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி. தங்களைப் போன்று கோயில்கள், அதன் மரபுகள் அறிந்த பெரியவர்கள் தான் இது போன்ற விஷயங்களில் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

Anonymous said...

இது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியா அல்லது இது சமீப காலமாக திணிக்கப்படும் 'கோயில்' வழிபாட்டு முறையா என்பது தெரியவில்லை. என் வீட்டில் அருகிலுள்ள் சிவன் கோயிலில் கற்பூரம் ஏற்றுவது 'மேலிடத்திலிருந்து உத்தரவு' வந்தாகக் கூறி கோயில் நிர்வாகிகள் தடை செய்துள்ளனர். இப்போது 'நெய் விளக்கு'மட்டுமே ஏற்ற அனுமதியுண்டு :( திருப்பதியில் கூட இப்போது மிக தொலைவிலிருந்து தான் கடவுளைப் பார்க்கமுடியும். 10 ஆண்டுகளுக்கு முன் சென்ற போது மிக அருகில் அனைவரும் செல்லாம். இது போன்ற கட்டுப்பாடு சிதம்பரத்தில் 'கொண்டு வரப்பட்டுள்ளதா' அல்லது 'தொன்று தொட்டு இருந்து வருகிறதா என்பது தெரியவில்லை :(

ஜடாயு said...

இல. கணேசன் அறிக்கை பற்றிய செய்தி அளித்த அனானி, நன்றி.

இன்னொரு தினமணி செய்தி:

---------------------

சிதம்பரம் சம்பவம்: சரத்குமார் கவலை

சென்னை, மார்ச் 3: சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாடியதால் ஏற்பட்ட பிரச்னை குறித்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை.

ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும்.

அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

ஜடாயு said...

தீட்சிதர்கள் தமிழ் அன்பர்கள், தங்கள் வேதக்கல்வி ஆசாரம் இவற்றைக் கடைப்பிடிப்பவர்கள். ஆனால் எந்த சாதி மீதும் வெறுப்பும், காழ்ப்புணர்வும் இல்லாதவர்கள்.

சிதம்பரத்தில் இருக்கும் இன்னொரு நண்பர் கூறிய விஷயம் இது:
3 வருடம் முன்பு திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். பிரசாரத்தின் போது கோயில் வந்திருந்தார். தீட்சிதர்கள் அவரை வரவேற்று, கனகசபை மீது ஏறுமாறு அழைத்து, தரிசனம் செய்வித்து மாலை, மரியாதைகளும் செய்தார்களாம். வழக்கமாக கட்டளைக் காரர்களான செட்டியார், முதலியார்களுக்கு மட்டுமே செய்யப் படும் மரியாதை இது என்றும் நண்பர் சொன்னார்.

திருமா கண்களில் கண்ணீருடன் சாமீ, இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.. உங்களைப் பற்றி வேறு என்னவோ நினைத்திருந்தேன்." என்று கூறினாராம்.

மிஷநரிகளால் பாழ்படுத்தப் பட்டுள்ள திருமாவின் இதயத்தை இத்தகைய செயல்களும், தெய்வ தரிசனமும் மாற்றுமா?

Anonymous said...

http://www.hindu.com/thehindu/holnus/004200803041762.htm
Armed with an order of the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department and supported by activists of a human rights group, Arumugasamy attempted to recite the hymns at the main shrine of the temple. However, his move was resisted by the Dikshitars on the ground that the pujas should be performed only in Sanskrit

Anonymous said...

கோயிலில் குழப்பம் விளைவித்தேன், பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இதை எல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை, நிச்சயமாக இல்லை. கோயிலில் குழப்பம் விளைவித்தேன், கோயில் கூடாதென்பதற்காக இல்லை. கோயில் கொடியவரின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக...

Anonymous said...

// கோயில் கொடியவரின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக...//

வெட்டி சினிமா வசனத்தை எடுத்துவிடும் கழக காலியே, நடராஜரின் பூஜையையும், ஆராதனையையுமே தங்கள் வாழ்க்கையாக தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரும் அப்பாவி தீட்சிதர்களை "கொடியவர்" என்று சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?

வாக்காளன் said...

//பழந்தமிழ் மன்னர்கள் அனைவரும் மதித்துப் போற்றிய சமயப் பெருந்தகைகளின் சந்ததியினரை //
அடப்பாவிங்களா, என்ன கொடுமை இது? பழைய மன்னர்கள் மதித்து போற்றியவங்களோட சந்ததிய இப்போவும் எல்லோரும் மதிச்சே ஆகனுமா.. சாதி கொழுப்பு உங்களுக்கு .. அது எப்பவும் போகாது..

//இந்துமத அபிமானிகளும், இந்து இயக்கங்களும், சிதம்பரம் நகர மக்களும் இந்த சதித் திட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.//

என்ன கேப்மாரித்தனம்.. இவங்க மட்டும் தான் இந்து மாதிரி.. மத்தவங்க இந்து இல்லை.யா... எப்படி திருப்பிவிடுறீங்கடா டேய்

Anonymous said...

http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID={4AF17DFF-3CB7-4530-A523-AFE7BE7FFBA3}&CATEGORYNAME=CHN
Volte face by Dikshidars after TN Govt warning
Chidambaram , March 05 Taking a u-turn from their stance, dikshidars of the famous Lord Nataraja temple here today accorded a rousing reception to Othuvars and other devotees to recite Tamil hymns Thevaram and Thiruvasagam in the sanctum sanctorum of the temple.

The dikshidars, who stoutly opposed Othuvars rendering Tamil hymns on March two, which resulted in violent incidents, changed their stand, a day after the Tamil Nadu Government warned the hereditary priests of legal action.

Armed with a Madras High Court order and a Government Order, the Othuvars, led by Tamil scholar Arumugasamy, had entered the temple to recite Tamil hymns, only to face stiff opposition from the dikshidars. However, police intervened and helped Arumugasamy to recite the hymns.

Taking a serious note of it, the Tamil Nadu Government had yesterday warned dikshidars of stringent legal action if they prevented othuvars from reciting Tamil hymns. A day after the Government warning, members of the Revolutionary Democratic Youth Front (RDYF) and Farmers Liberation Front (FLF) recited Thevaram and Thiruvasagam in the temple today.

About 50 members from both sides assembled on the temple premises. Due to space constraints, a representative each from either side was allowed to recite the Tamil hymns from the sanctum sanctorum. Mr Shanmugam of RDYF and Mr Murugan of FLF recited the hymns. Later, the dikshidars offered them temple prasadams.

Police have registered cases in connection with the violence and arrested 12 dikshidars, Arumugasamy and 34 of his supporters and lodged them in the Cuddalore sub-jail.

Meanwhile, Chief Minister M Karunanidhi chaired a high-level meeting at the State Secretariat in Chennai and ordered release of all those arrested.

He said that since there was no opposition by the Dikshidars for recital of Tamil hymns by Othuvars, the Government decided to release all those arrested in this connection. - Bureau report
Published: Wednesday, March 05, 2008

Anonymous said...

//கோயிலில் குழப்பம் விளைவித்தேன், கோயில் கூடாதென்பதற்காக இல்லை. கோயில் கொடியவரின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக...//

அடடா புல்லரிக்குது! ஆனா "ஆலயம்" கொடியவர் கூடாரமாக இருக்கலாம், அதாவது "அறிவாலயம்.." அங்கெல்லாம் இவரு சும்மா இருப்பார் !!

மேலும் மொத்தத்திலே தேவாரம் பாடல் எல்லாம் சும்மா, குழப்பம் விளைவிக்கனும் அவ்வளவு தான் !!!

Anonymous said...

ஓய்ந்தது சிதம்பரம் பிரச்சனை, தெரிந்தது சிதம்பர ரகசியம் ;)
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080305141737&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=
இனிமேலாவது பிரச்சனை இருக்காது அல்லது ஊதி பெரிதாக்கமாட்டார்கள் என நம்புவோம்...
- வெங்கடேஷ்

Anonymous said...

அப்படியே இந்த செய்தியையும் பாருங்க ஜடாயு.

- குமார்

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080305141749&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

இறுதி வெற்றி நடராஜருக்கே!

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் திருமுறைகள் பாடுவது தொடர்பாக தீட்சிதர்களுக்கும், ஓதுவார் ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலின் இறுதியில் நடராஜருக்கே வெற்றி கிடைத்துள்ளது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு.), விவசாயிகள் விடுதலை முன்னணி (வி.வி.மு.), மக்கள் கலை இலக்கிய கழகம் (ம.க.இ.க.), புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி (பு.ஜ.தொ.மு.), மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் புதன்கிழமை சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடப்போவதாக அறிவித்தன.

காலை 11 மணிக்கு கடவுள் மறுப்பை தங்கள் அடிப்படை கொள்கையாக கொண்ட அமைப்புகளின் தொண்டர்கள் சிகப்பு சட்டை அணிந்து நடராஜர் ஆலயத்திற்குள் ஊர்வலமாகச் சென்றனர்.

அவர்களில் சண்முகம் (பு.மா.இ.மு.), ஸ்டாலின், ஏழுமலை, ரவி, முருகன் (வி.வி.மு.) ஆகிய ஐந்து பேரை மட்டும் சிற்றம்பல மேடைக்குச் செல்ல போலீஸôர் அனுமதித்தனர்.

இவர்களில் சண்முகம், முருகன் இருவர் மட்டுமே தேவாரம் பாடினார்கள்.

சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடிய மகிழ்ச்சியுடன் திரும்பிய ஐவரும், "எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. தமிழுக்கு உரிய இடம் நிலை நாட்டப் படவேண்டும் என்பதற்காகவும், சாதிய கட்டுமானத்தை தகர்ப்பதற்காகவுமே நாங்கள் தேவாரம் பாடினோம் என்றனர்.

எது எப்படியோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியதன் மூலம் நடராஜர் பெருமானுக்குத்தான் வெற்றி என்று தீட்சிதர்களும், பொதுமக்களும் பெருமிதத்துடன் கூறினர்.

Anonymous said...

சிதம்பரம் தீட்சிதர்கள் குறித்து சி.கே.கரியாலி ஐ.ஏ.எஸ். அவர்கள் தென்றலில் விரிவாக எழுதியிருக்கிறார். சுட்டி இதோ...

http://www.tamilonline.com/thendral/CatContent.aspx?id=84&cid=46&aid=4460

நாட்டியாஞ்சலி பற்றி...

http://www.tamilonline.com/thendral/CatContent.aspx?id=83&cid=46&aid=4359

அவர் எழுதியிருக்கும் கட்டுரைகளைப் படித்தால் தீட்சிதர்களின் உண்மையான வாழ்க்கைமுறையை, அர்ப்பணிப்பு உணர்வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

கோயில்களையும், வழிபாடுகளையும் பற்றிப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் முதற்கண் ஆகம சாத்திரங்களையும், சைவ ஆகமங்களையும் முற்றிலுமாகப் படித்து விட்டுப் பேசினால்/எழுதினால் நன்மை பயக்கும். அதை விடுத்து 'தமிழ்', 'தமிழ்' என்று வெற்றுக் கூச்சல் போடுவதால் எந்தப் பயனுமில்லை.


தமிழும் வடமொழியும் தாயும் தந்தையும் போன்றது. இதில் உயர்வு-தாழ்வு கருதுவது வீண் முயற்சி. இராமலிங்க அடிகள் உட்பட பலர் இதனை வலியுறுத்தி இருக்கின்றனர்.

இனி இந்த சர்ச்சைகள் ஓய்ந்து, ஆன்மிகம் தழைத்து அருள் பொங்கட்டும். அமைதி நிலவட்டும்.

- சுவாமிநாதன், சென்னை

Anonymous said...

இது கருவறை நுழைவுப் போராட்டம். இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதில் ஈவேரா பிறந்த மண்ணின் மைந்தர்களுக்கு மகிழ்ச்சியே.

இப்போராட்டத்தில் துணை நின்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு.), விவசாயிகள் விடுதலை முன்னணி (வி.வி.மு.), மக்கள் கலை இலக்கிய கழகம் (ம.க.இ.க.), புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி (பு.ஜ.தொ.மு.), மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போன்ற கடவுள் அழிப்பை கொள்கையாகக்கொண்டுள்ள அமைப்புக்களுக்கு நன்றிகள்.


கருவறைகளைக் கழிவறைகளாக மாற்றும்வரை எங்களது போராட்டம் தொடரும்.

Anonymous said...

மற்ற தமிழகக் கோயில்கள்போல் அல்லாமல், உள்மண்டபத்திற்கு அருகிலேயே அனைவரையும் அனுமதிக்கும் ஒரே கோயிலாக இருக்கும் சிதம்பரத்தை அழிப்பது செத்த பாம்பை அடிக்கும் தீராவிடக் கும்பல்களுக்கு வீரதீரச் செயல்தான்.

Anonymous said...

tamizh nadu is now ruled by ateistdmk and its chief idotic dk veeramani.the viduthalai paper is full of venom about hindu gods and brahmins.all legal and moral support must be given to thillai dikishitars by hinduswe can not expect any help from congress and the ruling coilition.

Anonymous said...

எது எப்படியோ,, தமிழைக்காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு அரசியல் செய்திருக்கிறார்கள்.

Anonymous said...

இறைவனின் முன் எந்த மொழியில் பாடவேண்டும் என்பதற்கான சர்ச்சையில் இறைவனை கோட்டை விட்டு விட்டார்கள்.

மொழிகளுக்கு அப்பாற்பட்டு வழிபடவேண்டிய இறைவனை, மொழி என்கிற வட்டத்துக்குள் அடைத்தது துரதிருஷ்டமானது.

நோயின் தன்மை தெரீந்தவன் மருத்துவம் பார்த்தால் நோயாளி பிழைப்பார். மருத்துவமே தெரியாதவர்கள் பார்த்தால் என்ன கதி.....

அது போல தான் ஆன்மிகத்திற்கு துளியும் சம்பந்தமில்லாதவர்கள் தமிழை வளர்ப்பதாகக் கூறிக்கொண்டு சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டனர்.

இப்படி தமிழின் மீது மாளாத காதல் கொண்டவர்களாய் இருந்தால், முதலில் ட்தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு அன்றாடம் தேவாரம்,திருவாசகம்,பிரபந்தம் எல்லாம் சொல்லிக்கொடுக்கிறார்களா? அல்லது அன்றாடம் நடராஜப்பெருமானின் திருக்கோவிலே கதி என தமிழ் வளர்க்கிறார்களா?

நிற்க.... வட மொழியோ, தமிழோ, தெலுங்கோ எப்படியானாலும், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட இறைவன்னை அரசியல் கருவியாய் பயன் படுத்தியது கொடுமையே......

இதையே கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள்..... திருப்பதியில் அன்றாடம் திருப்பாவை முப்பதும் பாராயணம் செய்வார்கள்...... இதையே தெலுங்கர்கள் ஒரு சாக்காய் வைத்துக்கொண்டு, இனிமேல் தெலுங்கு கோவிலில் தமிழில் படிக்கக்கூடாது என்றால் நிலமை என்னாகும்....

ஜடாயு said...

// மொழிகளுக்கு அப்பாற்பட்டு வழிபடவேண்டிய இறைவனை, மொழி என்கிற வட்டத்துக்குள் அடைத்தது துரதிருஷ்டமானது. //

அனானி, நன்று சொன்னீர்!

திருப்பதி மட்டுமல்ல, ஆந்திராவில் ஏராளமான பெருமாள் கோயில்கள், வீடுகளிலேயே திருப்பாவை படிப்பார்கள் - தெலுங்கு எழுத்தில் எழுதி வைத்து (இங்கே தியாகராஜர் கீர்த்தனத்தை தமிழில் எழுதிவைத்து நாம் படிப்பதில்லையா, அது போன்று).

நாத்திகக் கருத்துக் குருடர்களுக்கு இந்த அற்புத ஆன்மிக ஒருங்கிணைப்பை உடைப்பது தானே குறி?

எனது பழைய பதிவு ஒன்று -

மொழிகள் சங்கமிக்கும் இந்து ஆன்மிகம்

சுனா பானா said...

யார் ரவுடித்தனம் செய்கிறார்கள், யார் தமிழ் பாடுவதை தடுக்கிறார்கள் என நீங்களே பாருங்கள்

சிதம்பரத்தில் தமிழ் முழங்கிய போராட்டம் - Youtube காட்சி பதிவுகள்

தில்லை1 - http://www.youtube.com/watch?v=mP_DIrhA18Y
தில்லை2 - http://www.youtube.com/watch?v=72lHGaaHYjg
தில்லை3 - http://www.youtube.com/watch?v=qIal4-Zplfo
தில்லை4 - http://www.youtube.com/watch?v=BoTJFbA7IdI

Anonymous said...

kizhichaanga. .!!Fault is on both sides.But think why all of a sudden they should create this problem.Some are unable to tolerate the income of the temple going to Dheekshithars. They may take the income themselves,but just think its them,who have saved the temple so far for hundreds and hundreds of years. nethikku vandhu perusaa pesa aarambichutaanga. Already you plundered everything from them. and are you aiming for their ..?well. Be honest.That's what we can say.